பாராலிம்பிக் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாரிப்பன் தங்கவேலுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எஸ் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாரிப்பனுக்கும் அவரது பயிற்சியாளர் சத்தியநாராயணனுக்கும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. 


பிறகு விழாவில் அவர் பேசியதாவது:- விளையாட்டு துறையில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று மாரியப்பன் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் சர்வதேச மைதானத்தை உருவாக்குவதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.