விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா தோல்வியுற்றார். இதனால் போட்டியிலிருந்து வெளியேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் போட்டியை வென்ற ஸ்பெயினின் முகுருஸா, 3-6, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 124-வது இடத்தில் இருந்த ஜானா செப்லோவாவிடம் தோல்வி கண்டார்.


சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், கார்பைன் முகுருஸா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். கடந்த 18 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.