உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினர், எனினும் இறுதி போட்டியில் அவர் ஜப்பான் வீராங்கனை நொசொமி ஒகுஹராவிடம் போராடி தோல்வி அடைந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-21, 22-30, 20-22 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியுற்றார்.


இதனால் அவரால் வெள்ளி பதக்கம் மட்டுமே பெறமுடிந்தது. போட்டியில் வென்ற சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இந்திய பேட்மின்டன் சங்கம், சிந்து-விற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக சாய்னா நெவால் அரைஇறுதி போட்டியில் தோல்வி அடைந்தார், இதன் மூலம் இவர் இந்தியாவிற்கான வெண்கலம் பதக்கத்தினை உறுதி செய்தார். தற்போது சிந்து-வின் வெள்ளி பதக்கத்துடன் இந்திய உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளது.