தமிழகத்தில் SSLC (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த தேர்வு முடிவு நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு எனப்படும் SSLC பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். மேலும் தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.


SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 
இதையடுத்து SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.


தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


www.tnresults.nic.inwww.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் SSLC Class 10 Result 2018 கிளிக் செய்யவும்.
கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.