தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையானது இன்று பிற்பகல் 3 மணியளவில் தொழில்ந்டுப கோளாறு காரணமாக பாதிப்படைந்தது. BSNL-இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுது எனவும் அந்த எண்ணுக்கு பதிலாக தற்காலிகமாக 044- 40170100 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் 108 ஆம்புலன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு சேவை வழக்கம்போல இயங்கும் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.


சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக 108 எண் செயல் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.