சென்னை, திருவெற்காட்டை அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார். இதில் குடி பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள், மறு வாழ்வு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாலையில் கிடந்த கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தும் வெள்ளை காகிதம்!


இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இமானுவேல் உள்ளிட்டோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தப்பியோடியவர்களில் 8 பேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு மீண்டும் வந்தனர். தப்பியோடியவர்களில் எஞ்சியிருக்கும் மேலும் 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 


போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை, மையத்தில் சிகிச்சை அளித்தவர்கள் தாக்கியதால் தப்பி சென்றார்களா? அல்லது அவர்கள் அங்கிருந்து சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | 12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR