தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு 3வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்குகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  21-ம் நாள் EPS அணியும், OPS அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலை, அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 


அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் எனவும், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், முதல்வருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவித்தனர். 


இதனையடுத்து கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு எனவும். தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளிக்கப்பட்டது. மேலும் தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், EPS OPS அணி கடிதம் அளித்தனர்.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஜூன் 14ம் தேதி இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.
அதில், சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்திருந்தார்கள். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.


இந்நிலையில் 12 நாட்களாக நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான ஐகோர்ட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படி இந்த இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.