திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு 2 வயது குழந்தை சுஜித் விழுந்தது, அப்பொழுது முதல் தற்போது வரை 16 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. சிறப்பு குழு, கோவையை சேர்ந்த மீட்பு குழு மற்றும் தமிழக காவல்துறை கடும் முயற்சி செய்து வருகின்றனர். பொது மக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். சுஜித்தை பத்திரமாக உயிருடன் மீட்க வேண்டும் என அனைவரும் வேண்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை, மருத்துவ குழு, வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். குழந்தைக்கு தொடர்ந்து பொற்றோர் மற்றும் உறவினர் மூலம் ஆறுதல் கூறப்பட்டு வந்தது. 


தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. குழந்தை ஒருவேளை மயக்கம் அடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் மயக்க நிலையில் குழந்தையை மீட்கப்பட்டாலும், அவரை காப்பாற்றி விடுலாம்எனக் கூறியுள்ளனர். குழந்தையை மீட்பது பெரும் சவாலாக இருப்பதால் 16 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.