தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இன்று ஞானபீடம் ஏற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 4ம் தேதி தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (94) இயற்கை எய்தினார்.


இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார்.


இந்நிலையில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக இன்று ஞான பீடம் ஏற்றாா். இந்த விழாவிவ் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.