இலங்கையின் கச்சத்தீவு பகுதில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கச்சத்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின் போது மீனவர்களின் வலைகளை காவல்துறை அதிகாரிகள் அறுத்து விட்டும், படகுகள் மீது கப்பலால் மோதியும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.


கச்சதீவு கடற்பரப்பில் 20 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடன் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரும் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், கஞ்சா வைத்திருந்தாக கூறி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடன் இருந்து 117 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் காரைகால் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.