மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 இல் இருந்து 28,000 கனஅடியாக அதிகரிப்பு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது!


கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 21,000 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 11,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை நிலவரப்படி, தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000இல் இருந்து 28,000 கனஅடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.04 அடி, நீர் இருப்பு 93.53 டிஎம்சியாக உள்ளது.  


மேலும் முக்கொம்பு அணையில் கொள்ளிடம் மதகுகள் உடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.