தமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில்., அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முவெளியிட்டனர்.


முதல் பிரதியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.


இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவரது ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற சாதனைகளைப் பற்றிய தமிழக அரசின் சாதனை மலர் வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டுள்ளார்.