சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த துரை முருகன் மற்றும் காவல்துறையினர் இருவருக்கும் நடந்த மோதலில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 12 ஆம் தேதி இதேபோன்று ஸ்ரீபெரும்புதூரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த துரைமுருகனை இன்று கைது செய்வதற்காக சென்றபோது, அப்பொழுது ஏற்பட்ட மோதலில், தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.


முத்தையாபுரத்தில் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற 35 வயதான துரை முருகனை தூத்துக்குடியில் உள்ள கூட்டாம்புளி தனிப்படை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 18 வழக்குகள் அவர் மீது போடப்பட்டு இருந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR