கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஓகி புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம், குழித்தட்டு விளையைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் என்பவரின் மகன் திரு. ரெத்தினசாமி, வடசேரி, வடக்கு வீதியைச் சேர்ந்த திரு. கணேசன் என்பவரின் மகன் திரு. தியாகராஜன் மற்றும் செங்கோடி, வாழவிளை மாத்தூரைச் சேர்ந்த திரு. முத்துமணி என்பவரின் மனைவி திருமதி அன்னம்மாள் ஆகிய மூன்று நபர்கள் பலத்தகாற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;


கன்னியாகுமரி மாவட்டம், இணையம் புத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, புயலின் காரணமாக காணாமல் போன மீனவர்களில் திரு.சூசைய்யா மற்றும் திரு ஜெர்மியான்ஸ் ஆகிய இரண்டு நபர்களின் சடலம் 3.12.2017 அன்று கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடையதேன்.


மரம் முறிந்து விழுந்து  உயிரிழந்த ரெத்தினசாமி, தியாகராஜன் மற்றும் அன்னம்மாள் மற்றும் மீனவர்கள் சூசைய்யயா, ஜெர்மியான்ஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.