பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில், காரில் பயணித்த 8 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அந்த சாலையின் நடுவே உள்ள பிரிவு சுவர்களை அகற்ற உத்தரவிட்டனர். இந்த கோர விபத்து சாலை வழியாக சென்ற பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? எமனின் வாகனமா?- சென்னையில் மீண்டும் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR