புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. 


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்கள். இவர்கள் கடலுக்குச் சென்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து வந்து இலங்கை கடற்படையினர் 1 படகையும், அதில் இருந்த 7 மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். 


அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.