கோயம்பத்தூர்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கடந்த சில காலங்களில் அதிகரித்து வருகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அதிலும், பெரும்பாலும், இந்த தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அக்குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பவர்கள் என்ற உண்மை மனித குலத்தின் மீதான நமது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் கோயம்பத்தூரிலிருந்து (Coimbatore) வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது ஏழு வயது (7 year old) பேத்தியை (Grand daughter) தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு (rape) ஆளாக்கிய குற்றத்திற்காக, கோயம்பத்தூரில் 65 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவர் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டார்.


பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரனுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக போலீஸ் தெரிவித்தது. அவரது பெற்றோர் சந்தையில் வெங்காய விற்பனை செய்து வந்தனர். வேலைக்குச் செல்லும் வேளையில் அவர்கள் குழந்தைகளை, குழந்தைகளின் தாத்தாவிடம் (Grand Father)  விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். முதியவரின் மனைவியும் மகனும் தினமும் பணிக்கு சென்று வந்ததால், அவர் பேரக் குழந்தைகளுடன் தினமும் தன் வீட்டில், காலைப் பொழுதுகளில் தனியாகத் தான் இருப்பார்.


65 வயதான் அந்த முதியவர் முதலில் ஜூன் மாதம் 26 ஆம் தேதியன்று தனது பேத்தியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அக்குழந்தையை அவர் அச்சுறுத்தினார். மாலையில் சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர் பெற்றோர், அடுத்த நாளும் வழக்கம்போல், தாத்தா வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்றனர். அச்சிறுமியை அந்த முதியவர் ஜூலை 2 ஆம் தேதி வரை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் அந்தச் சிறுமி, வெள்ளியன்று, தன் தாத்தா வீட்டிற்குப் போக வேண்டாம் என அடம் பிடிக்கத் தொடங்கினார். காரணம் புரியாமல் குழம்பிய பெற்றோர், மெதுவாக சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் ஒவ்வொன்றாக தனக்கு நடந்த கொடுமையை அக்குழந்தைக் கூற, அதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


நம் ரத்த சொந்தங்களைக் கூட நம்ப முடியாத கொடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு அனைத்து வித எச்சறிக்கை அறிவுறுத்தல்களையும் கொடுப்பதும், கூடிய வரை, அவர்களை தங்கள் கண் பார்வையிலேயே வைத்திருப்பதும் பெற்றோரின் தலையாய கடைமையாகும். அதுமட்டுமின்றி மனித குலத்தின் அடிப்படை நற்பண்புகளை எள்ளி நகையாடும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.


ALSO READ: செலவே இல்லாமல் தலைவலி, தலைபாரம், கழுத்து வலியை போக்கும் பாட்டி வைத்தியம்!