சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும்.