ஈரோடு அருகே உள்ள பழந்தின்னி கருப்பண்ணன் ஈஸ்வரன் கோயிலில் ஏலம் விடப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.7600 க்கு விலைபோனது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோடு மாவட்டம் புது அண்ணாமலை பாளையம் பகுதியில் உள்ள பழந்தின்னி கருப்பண்ணன் ஈஸ்வரன் கோயிலில் ஆண்டுதோரும் மகா சிவராத்திரி அன்று பூஜை நடத்தப்படுவது வழக்கம்.


இந்த பூஜையில் வைக்கப்பட்ட பூஜைப்பொருட்கள் அடுத்த நாள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சைப் பழத்தினை ஏலம் விடுகையில் அது ரூ.7600-க்கு ஏலம் போனது. இந்த நிகழ்வு தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.


இந்த எலுமிச்சைப் பழத்தினை வாங்கியவர் அப்பகுதியை சேர்ந்த, ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என தெரியவந்துள்ளது.


அதேப்போல், ஏலம் விடப்பட்ட வெள்ளிக்காசு ரூ.12000 -க்கும், 5 கிராம் வெள்ளி மோதிரம் ரூ 17000-க்கும் விலை போனது.