சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னையில் தற்போது மக்கள் மெட்ரோ பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றனர். பலர் தினசரி அலுவலகம், கல்லூரி செல்ல மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர்.  


இதனால் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதை கட்டுக்குள் கொண்டு வர சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறி உள்ளது. மேலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.