சட்டபேரவை கூடியதும் குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவை கூட்டம் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் நாளிலேயே மக்களின் குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலியான குடங்களுடன் அலையும் தாய்மார்கள், தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் என எங்கும் தன்னெழுச்சியான மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும் என்று கூறியுள்ளர்.


காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்கள், தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் என - எங்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று அனைத்து மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத "தண்ணீர் நெருக்கடி" ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 


இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், தண்ணீர் பிரச்னை எங்கும் தாண்டவமாடுகின்ற மிக மோசமான சூழ்நிலையிலும் கூட "குடிநீர் பற்றாக்குறை என்பது வதந்தி", "குடிநீர் பிரச்னை என்பது உருவாக்கப்படும் ஒரு மாயத் தோற்றம்" என்றெல்லாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது மிகுந்த வேதனைக்குறியது மட்டுமல்ல - போராடும் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது ஆகும். இனிமேலாவது இப்படிப்பட்ட பேட்டிகள் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டு குடிநீர் பிரச்னையை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மட்டும் முனைப்புக் காட்டவேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்க முன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளது கண்டனத்திற்குரியது. கேரள முதல்வர் அளிக்க முன் வந்த தண்ணீரை அதிமுக ஆரசு உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 


சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியவும், குடிநீர் பிரச்னையை சமாளிக்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டம் தொடங்கும் 28 ஆம் தேதி முதலமைச்சரே சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரியுள்ள மு.க.ஸ்டாலின், குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அளிக்க திமுக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.