கோவை மாவட்டம் நாமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், பாஜகவின் நெசவாளர் பிரிவினுடைய மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் பாஜகவின் உட்கட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரை அந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது எனக்கூறி அதே கட்சியை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை அவர் ஏற்க மறுத்ததாகவும், கட்சிக்குள் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவது தனது விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவிற்குள் புகுந்த  கார்த்திக் மற்றும் முத்துக்குட்டியின் பாஜக ஆதரவாளர்கள் சிலர், ஜெயக்குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் காயமடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாருடன் பாஜகவினர் சிலர் அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகளையும் சேர்த்து ஒப்படைத்துள்ளார்.இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


மேலும் படிக்க | பாஜக கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பூ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR