ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஆவின் பாலின் விலை தற்போது உயர்த்தப்பட்ட நிலையில், பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி விலையையும் உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில், ஆவின் தயாரிப்பில் விற்கப்படும் நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் புதன் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆவின் பால் பொருட்களின் விலை:-


நெய் லிட்டருக்கு ரூ.460 லிருந்து ரூ.495ஆக உயர்த்தப்பட்டுள்ளது


பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.320ஆக நிர்ணயம்


பால்கோவா கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.520ஆக நிர்ணயம்


அரைலிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27ஆக நிர்ணயம்