நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தற்கு நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 


தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். 


தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 


இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.