நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் இருந்து சந்தித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேச துவங்கிய அவர்; இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது என பேச துவங்கினார். அவர் எதாவது ஆவலாக தெரிவிப்பார் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு உங்களை இனி நான் எப்போது சந்திப்பேனோ மிஸ் யூ என கூறினார். 


கோவை தனக்கு பிடித்தமான இடம் என கூறிய ரஜினி, அங்கு தனக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது தனது குருநாதர் சச்சிதானந்தர் குறித்து நினைவுகூர்ந்த அவர், ஆன்மீகத்தை கற்றுக்கொடு; மதத்தை கற்று தராதே என அவர் கூறியதாக தெரிவித்தார்.


சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம் காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும். எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து தான் நம்மை மக்கள் மதிப்பார்கள். ஒரு முறை கோவையில் எனது ரசிகர்களின் ஆதரவை பார்த்துவிட்டு இது உன் காலம் என சிவாஜி என்னை வாழ்த்தினார் என்று அவர் தெரிவித்தார்.


இதனையடுத்து தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து வருகிறார்.