சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டம் தொடர்ந்து 
முதலில் யார் பேசுவது என்பதில் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:-


மக்கள் கருத்தை கேட்டு மற்றொரு நாளில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். மக்கள் கருத்தை கேட்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.