அனைத்துக்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி, நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மக்களின் சந்தேகங்களை தீர்த்த பிறகு தான் தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:- 


மக்களின் சந்தேகங்களை தீர்த்த பிறகே நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும். அதே சமயம் திட்டமிட்டபடி ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.