ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.


மேலும், 2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


மேலும் படிக்க | 2023 எப்படி இருக்கும்... பீதியை உண்டாக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!


மேலும் படிக்க | நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; 2023 ஆண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ