இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைதுசெய்யப்பட்ட சுகேஷ் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 


இதுகுறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து, கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுடன் நீங்கள் நேரடியாக போனில் பேசியதாக உங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது என்று செய்தியாளர் தெரிவித்தார். 


அதற்கு தினகரன், அப்படியா எஃப்ஐஆரில் என்ன தான் உள்ளது, எஃப்ஐஆரில் என்ன தான் உள்ளது என்று திரும்பத் திரும்ப செய்தியாளர்களிடம் கேட்டார்.