பயிர்காப்பீடு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரி வைகோ தலைமையில் இன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 10 மணி அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகே, பயணிகள் விடுதி முன்பு, இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ள மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்த ஆர்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.