விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். இவர் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேனாக இருந்துள்ளார். சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர் ஆவார். மறைந்த அதிமுக எம்.பி எஸ்.ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.