காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கிராமத்தில் அதிமுக பிரமுகராக இருப்பவர் ஜெயபால் இவரது மனைவி ஆரோக்கிய மேரி என்கிற ஆரோக்கியம் இவர் சோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கிராமத்தில் திமுக கழகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக பிரமுகர் ஜோசப். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சோமங்கலம் தலைவரின் மகள் மற்றும் திமுக பிரமுகர் ஜோசபின் கார் டிரைவர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பது குறிபிடத்தக்கது.


இதனால் ஆத்திரமடைந்த வ அதிமுக பிரமுகரான ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த குணசீலன் ஜான்பீட்டர் சார்லஸ் ஆகியோர் நுழைந்து திமுக பிரமுகர் ஜோசப்பின் மனைவி சியாமளா அவரது மகள்  ஷீலாஜோசப் முதியவர் ஜெயராமன் ஆகியோரை கொலைவெறியுடன்  தாக்கியுள்ளனர். 



மேலும் அவரது விலை உயர்ந்த ஸ்கார்பியோ காரை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசியும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.



இதுகுறித்து திமுக பிரமுகர் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய ஜெயபால் குணசீலன் ஜான்பீட்டர் சார்லஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR