திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: விழுப்புரம் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் (வயது  56) இன்று காலை எதிர்பாராவிதமாக ஏற்பட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திண்டிவனத்தை அடுத்துள்ள ஜக்காம்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று இரவு ஜக்காம்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவரது உறவினரான தமிழ்ச்செல்வன் என்பவர் காரில் உடன் வந்தார்.



காரை அருமைசெல்வம் என்பவர் ஓட்டி வந்தார். திண்டிவனம்- மைலம் சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புகட்டையில் மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தைலாபுரத்தில் நேற்றிரவு பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை வரவேற்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.