அதிமுக அதிமுக மக்கள் கட்சி, இங்கு எளியவர் கூட முதலவராக பதவிக்கு வரலாம் என மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். 


அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், தமிழகத்தின் பல்வேறு  கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அதிமுக அதிமுக மக்கள் கட்சி, இங்கு எளியவர் கூட முதலவராக பதவிக்கு வரலாம். ஆனால், திமுக மன்னர் கட்சி, அங்கு வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார்.