தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 


இந்நிலையில் தினகரன் ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 


இரு அணிகள் இணைப்பு தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக இன்று மாலை 5 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.