சென்னை: நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி பணநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.


இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 
தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை. பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது, அதுவே இந்த இடைத்தேர்தல் செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது என அவர் தெரிவித்துள்ளார்.