தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு அதற்கான இடங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. 


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி அந்த மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக அரசு அனுப்பிய விவரங்கள் போதவில்லை கூடுதல் விபரங்களை அனுப்புமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. 


மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.