சென்னை விமான நிலயத்தில் கடத்திவரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் பறிமுதல்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களின் உடமைகளை சோதனையிட்ட போது, அவர்கள் இருவரும் ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. 


இதையடுத்து கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த 2 பெண்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும்.