அமமுக-வின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் அதிமுகவில் இணைந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிடிவி தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.


சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து, மீண்டும் அவர் தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக கொண்டார். இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழ.சண்முகநாதன், அமமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், சமுதாய இயக்கம் போல் கட்சியை தினகரன் நடத்துவதாக கூறினார்.