திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " 100 -வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து உள்ளீர்கள். இவர் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதன் என்பர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைப்பவன் தலைவனாகலாம் என சொல்லுவதற்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் தற்போது எங்கள் தலைவனாக உள்ளார். மேலும், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கலைஞர் உருவாக்கிய துறையை பேரன் உதயநிதி ஸ்டாலின் வளர்த்து வருகிறார். 


மேலும் படிக்க | 2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பெண்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். உழைப்பாளி, போராளி,  தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார். இந்த நிகழ்ச்சியில் எதிரே உள்ள மைதானம் எப்படி காலியாக உள்ளதோ, அதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கு எதிரி யாரும் இல்லை. 100 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரிக்கு எப்போதும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும்" என்றார்.


இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பேசும்போது, கிருத்துவ சமுதாய பெருமக்கள் தான் திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு போறியா நல்லபடியாக போயிட்டு வா என்று வாழ்த்தி அனுப்பியவர் முதல்வர் தளபதி ஸ்டாலின் என்றார். அதன்பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்னை ஸ்போர்ட்ஸ் டே என்று தான் அழைத்தார்கள். ஆனால் இங்கு கல்ச்சுரல்ஸ் டே வாக  அமைந்துள்ளது. 


கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதற்காக நீங்கள் அனைவரும் பலமுறை  வகுப்பறையை cut அடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய தொடர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த கலை நிகழ்ச்சியின் வெற்றி ஆகும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் என்னை மீண்டும் கல்லூரி காலத்திற்கு அழைத்து சென்று அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. திருச்சியில் நடைபெறக்கூடிய கல்லூரி நிகழ்ச்சியில் நிச்சயமாக நீ கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு அழைத்து வந்ததற்கு அன்பில் மகேஷ் அவர்களுக்கு நன்றி. 


1924 ஆண்டு கலைஞர் பிறந்தார். அவருக்கு ஓர் ஆண்டு  முந்தையதாக இக்கல்லூரி பிறந்தது. திராவிட மாடல் கொள்கையை  முழுமையாக இக்கல்லூரி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்க வேண்டும் இந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும் என மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார், அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார்.  


வீட்டில் குழம்பு கரண்டியை பிடித்த பெண்கள் கையில் புத்தகத்தை கொடுத்தவர் கலைஞர். 100 ஆண்டுகள் தொடர்ந்து கல்வியை சேவை செய்வது சாதாரண காரியம் இல்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கலைஞர் அமுல்படுத்தினார். பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையில் கலைஞர் உறுதியாக இருந்தார். பெண்களுக்கு திருமண உதவித்தொகை, குறிப்பாக  உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் மேயராக, கவுன்சிலர்களாக செயலாற்றி வருகிறார்கள். 


பெண்கள் ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது என்று மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். குறிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் காலையில் எந்தவிதமான கஷ்டமும் படாமல் குழந்தைகளை பள்ளிக்கு தைரியமாக அனுப்புவதற்காக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் என தொடர்ந்து பெண்கள் கல்விக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம் பெண்களால்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு துறையில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வருகிறோம். குறிப்பாக தற்போது விளையாட்டு துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்  பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேசிய அளவிலான போட்டிகள் சர்வதேச அளவிலான போட்டிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம். இதனை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான பல போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். அதேபோன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து கல்வி சேவை செய்து வரும் கல்லூரிக்கும் மாநில அரசு துணை நிற்கும்" என்றார்.


மேலும் படிக்க | நாங்குநேரி: சின்னதுரையை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ