சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது... 


"சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் நாளை (நவ., 17) நடைபெறவிருந்த தேர்வுகள் கஜா புயல் காரணமாக வரும் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.


எனினும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளது!



முன்னதாக, இன்று (15-ம் தேதி) நடத்தபடவிருந்த பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அண்ணை பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் அறிவித்திருந்தார். மேலும் இந்த தேர்வானது வரும் 22-ஆம் நாள் நடைப்பெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாளைய தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.