மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு ஆணை பிறபித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மரணம் தொடா்பாக நீதி விசாரணை வேண்டும் என தமிழக அரசிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.


“மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் (Inquiry Commission) அமைத்து இன்று (25.9.2017) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.”


என தெரிவித்துள்ளது.