சென்னை: மக்களுக்கான பணியை தொடர காத்திருகேன் மேலும் உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் அதிமுக.வினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தன்னை சந்திக்க வரும் தொண்டர்களை பார்த்து விரைவில் அரசியல் பயணத்தை தொடரப் போவதாக தெரிவித்ட்திருந்தார்.


இந்நிலையில் சென்னை தி.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசியதாவது:-


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். சிறிது காலம் பொறுமை காத்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களுக்கான பணியை தொடர காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் 


இவ்வாறு அவர் பேசினார்.