இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா புதிய சாதனை படைப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.


இப்போது நடக்கும் வாக்கு எண்ணிக்கையை பார்த்தல் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் 2வது முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆவார்.


சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது. 


தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..


மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.


234 தொகுதிகள் கொண்ட  தமிழகத்தில் 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.


இந்த தேர்தலில் தமிழகத்தில் 73 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவானது.


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக எண்ணப்பட்டு வருகின்றன.