Udumalaipettai Gang Rape Case: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா - பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனையை செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் தன்னை அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


9 பேரில் மூவர் சிறுவர்கள்...


அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உடுமலை பகுதியை சேர்ந்த ஜெயகாளீஸ்வன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. 


மேலும் படிக்க | ஜெயக்குமார் மரண வழக்கு: தேவைப்பட்டால் அப்பாவுவை விசாரிப்போம் - ஐஜி கொடுத்த அப்டேட்!


இதையடுத்து 9 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் ஒரு சிறுமி பாதிப்பு


அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உரிய விசாரணைக்கு பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தநிலையில் கைதான  9 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 13 வயதான மேலும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


17 வயதான சிறுமி பெற்றோரை இழந்ததால் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர் குடும்ப வறுமை காரணமாக ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் வேலை தேடி இங்கு வந்துள்ளார். அப்போது அருகிலுள்ள ரேஷன் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்த  14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | உல்லாசத்திற்கு அழைத்து இளைஞர்களிடம் கைவரிசை... 2 அழகிகள் உட்பட 5 பேர் கைது!


ஒரு வருடமாக தொடர்ந்த கொடுமை


அந்த சிறுவன் சிறுமியிடம்  வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளான். இதை நம்பிய சிறுமி, சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது நண்பர்கள் 8 பேருக்கு சிறுமியிடம் அத்துமீற வழிவகை ஏற்படுத்தியுள்ளான். இதனை யாரிடம் சொல்லக்கூடாது என்பதற்காக சிறுமிக்கு பணம் கொடுத்துள்ளனர்.


இதனிடையே அந்த 17 வயது சிறுமியின் தோழியான 13 வயது சிறுமியையும் தங்களது ஆசைக்கு இணங்க வைத்து ள்ளனர். வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஒரு வருடமாக 2 சிறுமிகளையும் 9 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதில் 17 வயதான சிறுமி கர்ப்பமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. 9 பேர் மட்டுமின்றி மேலும் சிலர் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ