Gondaas Case On Savukku Shankar: சென்னை, திருச்சி, கோவை, தேனி உள்ளிட்ட இடங்களின் காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மதுரவாயலை சேர்ந்த ஆச்சிமுத்து என்பவரின் மகனான சங்கர் (எ) சவுக்கு சங்கர், என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (மே 12) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.


அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!


சவுக்கு சங்கரை துரத்தும் வழக்குகள்


முன்னதாக, சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து அவரை கைது செய்தது. தொடர்ந்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதையடுத்து அன்றைய தினமே அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி மேலும் ஒரு வழக்கு அவர் மீது தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த கஞ்சா வழக்கில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.


அதேபோல் திருச்சி காவல்துறையினரும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர் அதேபோல தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி, பத்திரிகையாளர் சந்தியா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்து அது தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதையடுத்து 5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆறாவதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ உடைய ஆவணங்களை போலியாக தயாரித்து அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் தற்போது சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது.


10 மணிநேர சோதனை


இதனிடையே சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். இதனிடையே கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சாவுக்கு சங்கரின் சென்னை மதுரவாயில் வீடு, திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் 10 மணி நேரமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.


அதில் சில ஆவணங்கள் லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள், கஞ்சா அடங்கிய சிகரெட்கள், இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும் இது தொடர்பாகவும் மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்தது.


மேலும் படிக்க | முருகன் சிலையை கலாய்த்த நெட்டிசன்கள்... கோயில் நிர்வாகம் உடனடி ஆக்சன் - என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ