ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் குடிநீரில் பாட்டிலில் வெடிகுண்டு இருப்பதாக ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்து வருகின்றன. 


மேலும்சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதை தவிர ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் 20 விமானங்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வரும் நிலையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.