ஓசூர் சானசந்திரம் பகுதியில் உள்ள சாலையோரம் ஆண் நபர் ஒருவரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து கைரேகைகளைச் சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்களை சேகரித்து கொண்டபிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்தும், அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்டவர் குறித்த சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஓசூர் காலேகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் யாரப். 45 வயதான இவர் மெத்தைகள் தைக்கும் கூலித்தொழில் செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையேயான கருத்துவேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்த யாரப் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2 மாதங்களாக ஓசூர் சானசந்திரம் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்தார்.



ஆம், கொல்லப்பட்டது யாரப் தான். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்திருப்பதாக தகவல் கிடைத்து அவரை கைது செய்திருக்கிறார்கள். அவரின் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் தான் யாரப் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க | மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G