சென்னை: மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால் சலுகைகளை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை (பிற்படுத்தப்பட்டோர்) சேர்ந்த நபர், அருந்ததியரை திருமணம் செய்த நிலையில் கலப்பு மண சான்று கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் கலப்பு திருமண சான்று அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 


இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1997 அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் தரப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பதை மேற்கொள்ள காட்டி, மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தர விட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ALSO RED | கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கும் மத்திய அரசு!


ஒரு காலத்தில் சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன மற்றும் கடும் எதிர்ப்பு இருந்தது. இன்னும் இருக்கிறது. எனினும் தற்போது புதிய தலைமுறையினர் அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்ய துவங்கியுள்ளனர். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகளை அரசும் செய்து வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR\