குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தொடர்ந்த வழக்கு  டெல்லி உயர்நீதிமன்றம்  பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக டிடிவி தினகரன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.



இந்த வழக்கினை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிப்ரவரி 15ம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளனர். மேலும், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதில்மனு தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது